கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!

🌼கடவுள் யாரையும் கை‌விடுவ‌தி‌ல்லை🌼 🌼ஒரு நாள் நான் முடிவு செய்தேன், இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று… 🌼ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவது என்று. துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன். 🌼அப்போது… கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன். 🌼“கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!” 🌼கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது… 🌼“ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?” 🌼“ஆமாம்” என்று நான் பதிலளித்தேன். 🌼“நான் புதர் செடி மற்றும் மூங்கிலு‌க்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போ‌தி‌ல் இரு‌ந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன். 🌼அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது. 🌼ஆனால் அப்போது மூங்க

ஒருவனுக்கு அவமானம் நேர்ந்தால் அவன் தர்மத்தை பின்பற்ற தவறினான் என்பது பொருள்!




கிருஷ்ணன்:- தர்மத்தை பற்றி அனைவரும் விவாதிப்பர் இருந்தாலும், எவரும் அது பற்றி அறிய முற்படுவதில்லை!
கர்ணன்:- தாமே கூறுங்கள் அதை அறியும் மார்க்கம் என்ன?
கிருஷ்ணன்:- தர்மம் அங்கீகாரத்தைப் பெற்றுத் தரவல்லது வாழ்வில் ஒருவனுக்கு அவமானம் நேர்ந்தால் அவன் தர்மத்தை பின்பற்ற தவறினான் என்பது பொருள்.
கர்ணன்:-ஒருவன் பிறப்பிலிருந்தே அவமானத்தை சகித்து வந்தால் அவன் ஆற்ற வேண்டிய பணி என்ன?
கிருஷ்ணன்:- அருகதையை பெற எதிர்த்து நிற்க வேண்டும் அது அதர்ம வழியில் இருக்கலாகாது உனது அதிகாரத்தைப் பெற துணிந்து நில் எனினும் உனக்கு அதிகாரமற்ற எதன் மீதும் மோகம் கொள்ளாதே! இதன் தாத்பரியம் யாதெனில் தன்னில் வழிந்தோடும் அருவி மீது உயர்ந்த பருவதம் இச்சைக் கொள்வதில்லை நதியை தடுக்கும் இச்சையை பருவதம் கொள்ளுமேயானால் அது உடைத்தெறியப்படும். நதி நீரின் அதிகாரம் பெற்றது சமுத்திரம் ஒன்றே!
கர்ணன்:- தம் வார்த்தை சமுத்திரத்தின் சக்தியைப் பற்றியதா? இல்லை பருவதத்தின் இயலாமையைப் பற்றியதா?
கிருஷ்ணன்:- கடலோடு நதி கொண்டிருக்கும் பற்றை பற்றியது கர்ணா...!

Comments

Popular posts from this blog

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், எனினும் தர்மமே வெல்லும்!!!

ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும் !

கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!