கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!

🌼கடவுள் யாரையும் கை‌விடுவ‌தி‌ல்லை🌼 🌼ஒரு நாள் நான் முடிவு செய்தேன், இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று… 🌼ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவது என்று. துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன். 🌼அப்போது… கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன். 🌼“கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!” 🌼கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது… 🌼“ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?” 🌼“ஆமாம்” என்று நான் பதிலளித்தேன். 🌼“நான் புதர் செடி மற்றும் மூங்கிலு‌க்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போ‌தி‌ல் இரு‌ந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன். 🌼அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது. 🌼ஆனால் அப்போது மூங்க

ஒரு குட்டி கதை



ஒரு அரசர் இருந்தார் , அவரிடம் 10 காட்டு நாய்கள் இருந்தது.
அவர் தவறுகள் செய்த எல்லா அமைச்சர்களையும் சித்திரவதை செய்து சாப்பிட அவற்றை பயன்படுத்தினார்.

மந்திரிகளில் ஒருவர் ஒரு முறை ஒரு தவறான கருத்து தெரிவித்தார், அது ராஜாவிற்கு  பிடிக்கவில்லை.  அதனால் அவர் அந்த அமைச்சரை அந்த நாய்களிடம்  தள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதற்கு அமைச்சர் கூறினார், "நான் 10 ஆண்டுகள் உங்களிடம் பணியாற்றினேன்,  நீங்கள் எனக்கு இதை செய்ய போகிறீர்கள்?
நீங்கள் என்னை அந்த நாய்களிடம்  தூக்கி போடும் முன்பாக எனக்கு 10 நாட்கள் அவகாசம் கொடுங்கள்! "

அரசர் ஒப்புதல் ...

முதல் நாள், அமைச்சர், நாய்களை கவனித்து கொண்டிருந்த காவலரிடம்  சென்று, "நான் நாய்களுக்கு பணியாற்ற விரும்புகிறேன்" என்று கூறினார்.

பாதுகாப்பாளர் குழப்பினார், ஆனால் அவர் ஒப்பு கொண்டார்.
எனவே அமைச்சர், நாய்களுக்கு உணவளித்தல், அவற்றை குளிப்பாட்டுதல், அவர்களை சுத்தம் செய்தல் என்று அவற்றுக்கு அணைத்து பணிவிடைகளும் செய்தார்.

10 நாட்கள் முடிவடைந்த போது, ராஜா அவரை தூக்கி அந்த நாய்களிடம் எறியுமாறு பணியாட்களுக்கு உத்தரவிட்டார்.

ஆனால் அவர் எறியப்பட்ட போது, அவர்கள் அனைவரும் நடந்ததை பார்த்து அதிர்ச்சியானார்கள். நாய்கள் அவரை கடித்து திண்பதற்கு பதிலாக அவரது பாதங்களை நக்கி தன் நன்றியை தெரிவித்து கொண்டன.

மன்னரும் இதை பார்த்து குழப்பி "நாய்களுக்கு என்ன நடந்தது!" என்று விசாரித்தார்.

மந்திரி கூறினார், "நான் நாய்களுக்கு 10 நாட்கள் சேவை செய்தேன்.. அவை என்னை மறக்க வில்லை.. நான் உங்களுக்கு 10 வருடங்கள் சேவை செய்தேன்... ஆனால் நீங்கள் என்னுடைய முதல் தவறுக்கு என்னை தண்டித்துவிட்டீர்கள்."

அரசர் தன் தவறை உணர்ந்து...

நாய்களுக்கு பதிலாக "ஓநாய்கள்" வாங்கினார்!

Comments

Popular posts from this blog

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், எனினும் தர்மமே வெல்லும்!!!

ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும் !

கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!