கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!

🌼கடவுள் யாரையும் கை‌விடுவ‌தி‌ல்லை🌼 🌼ஒரு நாள் நான் முடிவு செய்தேன், இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று… 🌼ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவது என்று. துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன். 🌼அப்போது… கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன். 🌼“கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!” 🌼கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது… 🌼“ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?” 🌼“ஆமாம்” என்று நான் பதிலளித்தேன். 🌼“நான் புதர் செடி மற்றும் மூங்கிலு‌க்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போ‌தி‌ல் இரு‌ந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன். 🌼அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது. 🌼ஆனால் அப்போது மூங்க

அமிலம்...



மணி காலை 5.30.

தூக்கமே வரல.

இன்னும் மனிதாபிமானமும் இரக்க குணமும் மனுஷங்களுக்கு இருக்கா இல்ல பணத்த தேடி அலையுற வேளைல மத்த மனுஷங்களோட கஷ்டங்களையும் வேதனைகளையும் திரும்பி பாக்க நேரம் இல்லையான்னு தெரியல.

ஏதோ டீக்கடைளயும் நியூஸ்பேப்பர்லயும் அப்பப்ப பாக்குற ஒரு விஷயம்,  இவனுங்களுக்கு வேற வேலையே கிடையாதுன்னு அந்த செய்திகள படிக்காம விடற ஒரு விஷயம், முதல் முறையா என் கண்ணு முன்னாடி நடந்துச்சு.

முன்தினம் இரவு எட்டு மணி.

செம்மொழி உணவகம், அடையார், சென்னை. வணிகர் தினம்னாலோ, மழை பேஞ்சாலோ, தெருல ஏதாவது அரசியல் கட்சி மீட்டிங் நடந்தாலோ எல்லா ஹோட்டலையும் மூடிடுறாங்க. எங்கள மாதிரி பேச்சுலர் பசங்க சோறுக்காக ஹோட்டல் தேடி தேடி அலைய வேண்டியதா போயிடுது. நேத்து நடந்ததும் இதே கதை தான்.

செம்ம மழை. அப்டின்னுலாம் சொல்ல முடியாது. சென்னைக்கு அது பொருந்தவும் பொருந்தாது. லேசான மழைதான். ஆனா ஊரெல்லாம் தண்ணி.

எல்லா சின்ன ஹோட்டலும் மூடிட்டாங்க. நான் எப்பயும் கணக்கு வெச்சு சாப்படற அக்கா ஹோட்டலயும் காணோம். ஹோட்டல்ன்னா தள்ளு வண்டிக்கடை.

ஊரெல்லாம் சுத்தி கடைசியா நான் கண்ட ஹோட்டல்தான் இந்த ‘செம்மொழி உணவகம்’. இந்த ஹோட்டல்க்கு எதிர்த்தாமாதிரி ஒரு போலீஸ் ஸ்டேஷன்.

மழை தண்ணியினால சொதசொதன்னு தண்ணியா இருந்துச்சு ஹோட்டல். இந்த ஹோட்டல் ஒன்னு இங்க இருக்கறதே எனக்கு இன்னைக்குதான் தெரியும். புதுசா அடிச்சிருந்த பெய்ன்ட். அதுல வர்ற பெயிண்ட் வாசன , கல்லால உக்காந்துயிருந்தவரோட இரவு நேரத்து குங்கும பொட்டு, அவரு அந்த ஹோட்டல்ல வேலை செய்யுற பசங்கள ‘அந்த டேபிள கவனி’ , ‘சார்க்கு என்ன வேணும்னு கேளு’, ‘ மொதல்ல சாப்புட வந்தவங்களுக்கு தண்ணி வை பையா’ போன்ற வாக்கியங்கள் புது ஹோட்டல்தான்னு உறுதிபடுத்தினிச்சு.

வெளில மழைதூரிட்டு இருந்ததுக்கும் அடுப்புல தோசை ஊத்தறப்போ வந்த ஆவிக்கும் பசி இன்னும் அதிகமானிச்சு.

போயி ஒரு டேபிள்ல உக்காந்தேன். போட்டுட்டு வந்த தொப்பிய பக்கத்து ச்சேர்ல வெச்சுட்டு சுத்திமுத்தி பாத்துட்டிருந்தேன். அப்போ ஏதோ நேப்பாலா பீகாரான்னு தெரியல. அந்த முகஜாடை உள்ள ஒரு பையன் வந்து டேபிள சுத்தம் செஞ்சான்.

கொஞ்சம் தண்ணி எடுத்து டேபிள் மேல தெளிச்சு சின்ன முறம் மாதிரி ஒன்னு வெச்சு சரட்டு சரட்டுன்னு இழுத்தான். டேபிள்ல இருந்த தண்ணி லேசா என் மேல தெளிச்சுடுச்சு. ‘பாத்துப் பா’ன்னு சொல்லிட்டு நான் எழுந்துக்கிட்டேன். அத ஓனர் பாத்துட்டு அந்த பையன சத்தம் போட்டார். ‘பாத்து செய்ய மாட்டியா டா பய்யா. பாத்து கிளீன் கரோ’ன்னார்.

கொஞ்சம் ஹிந்தி. கொஞ்சம் தமிழ்.

‘பல கஷ்டமர்கள டீல் பண்ணுற முதலாளிங்க நெறைய மொழிகள் தெரிஞ்சு வெச்சுருக்காங்க. இந்த அரசியல்வாதிங்கதான் நம்மள ஹிந்தி கத்துக்கவிடாம தடுத்துட்டாங்க. ச்ச. ஒரு பாணி பூரி கடைக்கு போனாக்கூட சின்ன சின்ன சிட்டுபிட்டுலாம் கொஞ்சம் வெங்காயம் குடு பய்யான்னு ஹிந்தில கேக்குறாங்க. இன்னைக்கு ஹோட்டல் , முடி வெட்டுற கடை, சூப்பர் மார்க்கெட் , செக்யூரிட்டின்னு எல்லா எடத்துலயும் இந்த வடஇந்தியாக்காரங்க வந்துட்டாங்க. இங்க்லீஷ் மீடியம்ல படிச்சிட்டு நாம என்ன இங்கிலீஷ்ல பேசி கிழிச்சிட்டோம். எங்க போனாலும் தமிழ் , யார்ட பேசினாலும் தமிழ்தானே. இதுக்கு எதுக்கு ஹிந்திய கத்துக்க விடாம தடுத்தாங்க’ன்னு யோசிச்சுட்டு இருக்கப்போவே அந்த பய்யா தொடச்சு முடிச்சுட்டான்.

நான் டேபிள்ல உக்காந்தேன். டேபிள் மேல ஒரு தக்காளி சாஸ் பாட்டில் , சில்லி சாஸ் பாட்டில் இருந்துச்சு. அப்பறம் நாலு டம்ளர் ஒரு தட்டு மேல கவுத்திருந்துச்சு. பக்கத்துல ஒரு ஜார்-ல தண்ணி இருந்துச்சு. எனக்கு தோச சாப்புடலாமா பிரைட் ரைஸ் சாப்புடலாமான்னு மனசுக்குள்ள குழப்பம். ஒரு அண்ணன் வந்து ஆர்டர் கேட்டார்.

‘என்ன சாப்புடுறீங்க. ஒரே ஆர்டரா சொல்லிடுங்க சார். மழையினால கூட்டம் அதிகமா இருக்கு. சீக்கிரமா பார்சல் பண்ணி அனுப்பிட்டிருக்கோம்’ன்னாரு.

‘ஒரு சிக்கன் ரைஸ்’ண்ணா.

‘வேற சார். சைட் டிஷ் எதாவது?’-ன்னார்.

‘இல்லன்னா அவ்ளோதான்’, சொல்லிட்டு அந்த ஹோட்டல திரும்பி என்னலாம் இருக்குன்னு சுத்திமுத்தி பாத்துட்டு இருந்தேன். மழை அதிகமாயிட்டே இருந்துச்சு. நான் உக்காந்து இருந்த டேபிள்க்கு வலது பக்கத்துல ஒரு டேபிள். ரெண்டு பேர் சாப்பிட்டுட்டு இருந்தாங்க. பின்னாடி இன்னொரு டேபிள். அதுல அப்பதான் மூணு பசங்க கைலியோட வந்து உக்காந்தாங்க. எனக்கு இடதுபக்கத்துல இருந்த டேபிள்ல சாம்பார் , சட்னி, இலைலாம் வெச்சிருந்தாங்க.

என்கிட்ட ஆர்டர் எடுத்த அண்ணன் வந்து ‘ சார் , ரைஸ் கொஞ்சம் லேட் ஆகும். தோசை சொல்லிடலாமா’-ன்னாரு.

‘இல்லண்ணா வெயிட் பண்றேன். வெளில வேற ஏதும் ஹோட்டல் இல்ல. மறுபடி நைட் பசிச்சுதுன்னா திரும்ப அலைய முடியாது’-ன்னு சொன்னேன்.

‘சரி சார். ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க’-ன்னு சொல்லிட்டு அவர் போயிட்டார். அவர் காதுல போட்டிருந்த கடுக்கன் சின்னதா அழகா இருந்துச்சு.

ஹோட்டல் ஓனர் அப்பயும் ஏதோ சொல்லி கத்திட்டே இருந்தார்.

ஒரு சுவாரஸ்யமான பேச்சு ஒன்னு காதுல விழுந்துச்சு. கைலி கட்டிக்கொண்டு சாப்பிட வந்த பசங்களோட பேச்சு அது.

‘டேய் நீ தான் நேத்து அன்வர் கடைல சாப்பிட்டப்போ நாலு பரோட்டா சாப்பிட்டல்ல. இன்னைக்கு நான் நாலு நீ மூணு இவன் மூணு’

‘இன்னைக்கு நான் சாப்புட்டுக்கறேன் டா. நீ நாளைக்கு சாப்புட்டுக்க’

‘மொத்தம் நூறு ரூபா இருக்கு. அது இல்லாம ஏழு ரூபா சில்ற இருக்கு. கரக்டா பத்து ப்ரோட்டாதான் வரும்’ சாப்பாட்டுக்கு எவ்ளோ கஷ்டம். எவ்ளோ சம்பாதிச்சாலும் சாப்பாடுக்கு மட்டும்தான் செலவு பண்ண முடியுங்கற நெலமை சீக்கிரமே வந்துடும் போலன்னு நெனச்சுக்கிட்டே இருக்கப்போ, ‘தம்பி என்னப்பா சாப்புடறீங்க’ ன்னு பின்னாடி இருந்த டேபிள்ல ஆர்டர் எடுத்தார் எனக்கு ஆர்டர் எடுத்த அண்ணன்.

‘ஒரு நாலு ரெண்டு மூணு புரோட்டா அண்ணே’

‘புரோட்டா காலிப்பா’

‘இல்லையா ?!?!?’-ன்னு கோரஸ்ஸா மூணு பேரும் அதிர்ச்சியா கேட்டாங்க. எனக்கும் அதிர்ச்சி. ‘வேற ஏதும் சாப்புடறிங்களா?’ன்னு கேட்டார் அந்த அண்ணன்.

நான் திரும்பி அவர் கடுக்கன்-ன இன்னொரு முறை பாத்தேன்.

என் பக்கம் அவர் திரும்பி ‘சார் போட்டுட்டு இருக்காங்க. ரெண்டு நிமிஷம்’-ன்னார். நான் மறுபடி என் டேபிள் பக்கம் திரும்பிட்டேன்.

இப்போ நினைப்பெல்லாம் அந்த பசங்க பத்திதான். கையில காசு கம்மியாதான் இருக்கு. அவனுங்க பசி தீத்துக்கலாம்ன்னு நெனச்ச பரோட்டா தீந்துபோச்சு.

என்ன பண்ண போறாங்களோ-ன்னு யோசிச்சுட்டு இருக்கப்போவே அந்த ஆர்டர் எடுக்கற அண்ணன், ‘தம்பிங்களா காசு இல்லையா டா. இப்படி ஒருத்தர ஒருத்தர் பாத்துக்கறீங்க. ரெண்டு ஒன் பை டூ எக் ரைஸ் தரட்டுமா? நூத்தி பத்து ரூபா வரும். இருக்கா’ன்னார். ‘ண்ணா மூணு ரூபா கம்மியா இருக்குண்ணா’,ன்னான் ஒரு பையன்.

‘நான் சொல்லிக்கிறேன் டா’ன்னு சொல்லிட்டு ,’மாஸ்டர் ரெண்டு எக் ரைஸ் ஒன் பை டூ’ன்னு சவுண்டு குடுத்தார். கொஞ்சமாச்சும் மனிதாபிமானம் இருக்கேன்னு நான் சிரிச்சுக்கிட்டேன்.

அப்போ என்னோட வலது பக்கத்துல இருந்த டேபிள் காலியானிச்சு. அங்க ஒரு பையனும் பொண்ணும் வந்து உக்காந்தாங்க.

பொண்ணு அழுதிருந்துச்சு. அந்த பையன் முகத்துல ஒரே கோபம்.

அந்த பொண்ணு குனிஞ்சுக்கிட்டே இருந்துச்சு. அவன் ‘ ஹே என்ன பாரு டி. ..............’-ன்னு கெட்ட வார்த்தைல திட்டினான். அவ பாக்கல. வேற யாருக்கும் கேட்டிருக்க வாய்ப்பில்ல.

எனக்கு சிக்கன் ரைஸ் வந்துடுச்சு. நான் சாப்பிட ஆரம்பிச்சேன்.

ஆர்டர் எடுக்கற அண்ணன் பக்கத்து டேபிள்ல இருக்கற பையன்கிட்ட வந்து ஆர்டர் கேட்டாரு.

‘இருண்ணா இன்னொரு பையன் வரணும்’-ன்னான் அந்த பையன்.

அந்த பொண்ணு பையன் ரெண்டு பேருமே சின்ன பசங்க. ரெண்டு பேருக்கும் இருபது வயசு இருக்கும். அந்த ஆர்டர் அண்ணன் போயிட்டாரு.

இன்னொருத்தன் வந்தான். நேரா போயி பின்னாடி டேபிள்ல இருந்த மூணு பேர் டேபிள்ல உக்காந்தான். வரும்போது எனக்கு வலது பக்கம் இருக்க , அந்த பையன்கிட்ட கைய காமிச்சு ஏதோ செய்கை காட்டிட்டு வந்தான்.

என்னடா இவன் அவனுக்கு கை காமிச்சிட்டு இந்த பசங்ககூட வந்து உக்காருறானேன்னு நான் திரும்பி பாத்தேன்.

ஏதோ பொட்டலத்த எடுத்து அந்த டேபிள் மேல வெச்சான்.

அப்போ ஒரு பையன் மட்டும் என்னை திரும்பிப் பாத்தான்.

நான் என்பக்கம் திரும்பிக்கிட்டேன்.

அதுக்கப்பறம் அந்த நாலு பேரும் ஏதோ பேசிக்கிட்டாங்க. ரொம்ப கமுக்கமா பேசினானுங்க. நான் அதுக்கப்பறம் அவங்க பேசுறத கண்டுக்கல. நாலாவதா வந்த பையன்மட்டும் எழுந்து வந்து எனக்கு வலது பக்கம் இருக்க டேபிள்ல உக்காந்தான். அந்த பொண்ணுகூட வந்த பையன் கிளம்பிட்டான்.

எனக்கு ஒண்ணுமே புரியல.

அந்த பையன் பேச ஆரம்பிச்சான். அவன் போட்டிருந்த ஜீன் பேன்ட் , டீ ஷர்ட் எல்லாம் அவன கொஞ்சம் டீசன்ட்டா காட்டினிச்சு.

‘உனக்காக அவன் எவ்வளோ பண்ணிருக்கான். நீ அதெல்லாம் யோசிச்சியா?’

‘இல்ல ராகுல். அவன் சரியில்ல. எனக்கு தெரிஞ்சே அவன் நெறைய தப்பு பண்றான்.எல்லா நாளுமே குடிக்கிறான். அவன் சேர்க்கையும் ஒன்னும் சரி கிடையாது’

‘என் கூட சேருறத சொல்றியா’

‘சேச்சே.. நான் உன்ன சொல்லல. அவன் குடிச்சுட்டு பேசினா என் அப்பாவ வெட்டிட்டு என்ன கல்யாணம் பண்ணுவேன்னு பேசுறான். நல்லா இருந்தா உங்க அப்பா அம்மாவெல்லாம் நம்ம நல்லா பாத்துப்போம்னு பேசுறான். அவன நம்ப முடியல’

‘உன் விஷயத்துல அவன் ரொம்ப நல்லவன். அவன் குடிப்பான்னு தெரிஞ்சுதான அவன லவ் பண்ணின?’ன்னு கேட்டான்.

‘ஏன் உங்களுக்கு புரிய மாட்டேங்குது. அன்னிக்கு யாரோ தெரு பையன் பிரச்சனைக்காக யாரையோ அடிச்சு போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போய்ட்டு வந்திருக்கான். என்னால இதுக்கும் மேல பயந்து பயந்து இருக்க முடியாது. எனக்கு இது ஒத்து வராது’

எனக்கு பின்னாடி இருந்த பசங்களுக்கு எக் ரைஸ் வந்துச்சு.

‘ஹே என்னாடி ஓவரா பெனாத்துற. தெரிஞ்சே லவ் பண்ணுவீங்க. அப்பறம் கழட்டிவிடுவீங்களா? ................. உன்னயெல்லாம் எங்கயாச்சு கூட்டிட்டு போயி எதா பண்ணி போடி .......ன்னு அனுப்பிருக்கணும்’

‘பாத்து பேசு ராகுல்’, கோபமா கத்தினா அந்த பொண்ணு.

ஓனர் , ‘ என்னப்பா பிரச்சன அங்க? என்னம்மா ஆச்சு’ன்னு அந்த டேபிள் பக்கத்துல வந்தார்.

‘ஒன்னுல்ல சார். சும்மாதான் பேசிட்டிருக்கோம்’ன்னு சொன்னா அந்த பொண்ணு.

‘ஏன் ம்மா அழற. இந்த பையன் ஏதாவது பிரெச்சன பண்றானா சொல்லு’ன்னாரு ஓனர்.

‘இல்ல சார். நீங்க போங்க. சும்மாதான் பேசிட்டிருக்கோம்’,ன்னு சொன்னா அந்த பொண்ணு மறுபடியும்.

‘என்னவோ’,ன்னு ஓனர் போயிட்டார்.

அந்த பையன் எதுமே பேசல ஓனர் போகறவரைக்கும். மறுபடி ஆரம்பிச்சான். ‘ ஹே பதில் பேசு டி ...... . எல்லாம் தெரிஞ்சு லவ் பண்ணுவிங்க, பைக்ல கட்டிபிடிச்சுக்கிட்டு சுத்துவீங்க , நைட்டெல்லாம் போன் பேசுவீங்க , பத்தாததுக்கு சேந்து போட்டோல்லாம் கூட எடுத்துப்பீங்க. ஆனா கல்யாணம் பண்ணிக்கமட்டும் மாட்டீங்க’

‘எல்லாம் கரக்ட்தான். ஆனா நான் என்னன்னு போயி என் அப்பாக்கிட்ட சொல்லுவேன். அவன அதே போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல வெச்சு என் அப்பா பாத்திருக்கார். நான் போயி இவன தான் லவ் பண்றேன்னு சொன்னா செருப்பால அடிப்பாரு.என் பின்னாடி சுத்தி உன் பிரெண்ட்டுக்கு வக்காலத்து வாங்கறத நிறுத்து முதல்ல’-ன்னு மறுபடி கத்தினா அந்த பொண்ணு. பின்னாடி இருந்த பசங்க சாப்புடல. எழுந்து வந்து அந்த பொண்ணு இருந்த டேபிளுக்கு கொஞ்சம் முன்னாடி வாசல்கிட்ட போயி நின்னாங்க.

‘நீயெல்லாம் பேசிட்டே இருந்தா உன் வேலைய காட்டிட்டேதான் இருப்ப’ன்னு சொல்லிட்டே அந்த பையன் எழுந்து அந்த மூணு பேர் கூட போயி நின்னான்.

‘ஏய்’-ன்னு சவுண்டு குடுத்தான்.

அந்த பொண்ணு நிமிர்ந்து பாத்தா. அந்த மூணு பேருல ஒரு பையன் அந்த பேப்பர் பொட்டலத்த அந்த பொண்ணு மூஞ்சுல அடிச்சுட்டு ஓடினான். எல்லாரும் ஓடினானுங்க.

அது ஒடைஞ்சு சிதறி அதுல ஒரு பீஸ் நான் சாப்பிட்டுட்டு இருந்த என் சாப்பாடுல வந்து விழுந்துது. என்னன்னு யோசிக்க முடியல. திரும்பி அந்த பொண்ணு மூஞ்ச பாத்தா தோசை கல்லுல தண்ணி ஊத்தின மாதிரி பொசுங்குது.

ஆசிட்.
ஆசிட் முட்டை.

ச்ச. அந்த பொண்ணு உயிர விட்டு கத்துறா.

அந்த நாய்ங்க ஓடிட்டானுங்க. அந்த பொண்ணு அலறிக்கிட்டே முகத்துல கை வைக்க முடியாம டேபிள்ல இருந்து எழுந்து பொத்துன்னு கீழ விழுந்தா.

ஓனர் ஓடிவராரு. நான் பதறிப் போயி எழுந்து ஒரு மூளைக்கு போயி நிக்குறேன். அந்த பொண்ணு மூஞ்சுல டேபிள் தொடைச்ச பையன் தண்ணிய எடுத்து வந்து ஜார் ஜாரா ஊத்துறான்.

ஓனர் கத்துறாரு. ‘யார்னா போயி போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து கான்ஸ்டபிள் யாராச்சும் கூட்டிட்டு வாங்களேன்’ நூத்தி எட்டுக்கு போன் பண்ணி சொன்னேன் நான். ஆர்டர் எடுத்த அண்ணன் அதுல காணோம்.

ஒருத்தர் ஓடிப்போயி ஒரு போலீஸ்ஸ அழைச்சுட்டு வந்தாரு.

இதுல கொடுமை என்னன்னா அந்த பொண்ணு மூஞ்சுல ஆசிட் ஊத்துனதுல இருந்து ஒருத்தன் வீடியோ எடுத்துட்டு இருந்தான்.

என்ன கேவலமான மனுஷங்க இல்ல.

எனக்கு டவுட் எல்லாம் அந்த ஆர்டர் எடுத்தவனும் அவனுங்க கூட்டாளியாங்கறதுதான்.

கான்ஸ்டபிள் ஷட்டற மூட சொல்லிட்டாரு.

‘யாரையும் உள்ள அனுப்பாதீங்க. யாரையும் வெளில போக விடாதீங்க’ ன்னாரு போலீஸ்.

அதுக்குள்ள அந்த ஆர்டர் எடுத்தவன் வந்தான். அவன் புடிச்சுட்டு வந்தது அந்த நாலாவதா வந்த பையன.

‘இவன்தான் சார் அந்த பொட்டலம் கொண்டு வந்தவன்’ன்னாரு ஆர்டர் எடுத்த அண்ணன்.

நெஜம்மா அவர் மேல ஒரு மரியாதையே வந்துடுச்சு.

அடின்னா அடி சம்ம்ம்ம்ம அடி அந்த பொட்டலம் கொண்டு வந்தவனுக்கு. அந்த பொண்ண தொடவோ , அவளுக்கு எதும் முதலுதவி பண்ணவோ யாரையும் விடல.

ஆம்புலன்ஸ் வந்துச்சு. அதுக்குள்ள அந்த பொண்ணு வெச்சிருந்த பேக்ல ஆராய்ஞ்சு அங்க இங்கன்னு கால் பண்ணி அந்த பொண்ணு வீட்டுக்கு சொல்லிட்டாரு போலீஸ்.

அந்த பொண்ணுகூட என்னை ஆம்புலன்ஸ்ல ஏறி போக சொன்னாங்க. அதுக்கு முன்னாடி இன்னொரு போலீஸ் வந்தாரு. என்கிட்ட எல்லா டீட்டெயில்ஸ்சும் வாங்கிக்கிட்டாரு. என்னோட பைக் சாவியையும் சேர்த்து வாங்கிட்டாரு.

எனக்கு பதறுது.

நான் ஆம்புலன்ஸ்ல ஏறி போயிட்டே இருந்தேன்.

அந்த பொண்ணு மூஞ்ச பாக்குறப்போ எனக்கு அழுகையா வந்துச்சு.

அந்த பொண்ணுக்கு உயிர் இல்லன்னு மட்டும் என்னால நிச்சயமா சொல்ல முடியும்.

செத்துட்டா.

ஆனா ஹாஸ்பிட்டல் போயிட்டிருக்கோம்.

அழ ஆரம்பிச்சுட்டேன்.

ஹாஸ்ப்பிட்டல் போயி அந்த பொண்ண சேத்துட்டு ‘அந்த பொண்ணு செத்துடுச்சு’ன்னு என் காதுல விழறதுக்கு முன்னாடியே நான் அங்க இருந்து கிளம்பி வீட்டுக்கு வந்துட்டேன்.

என் வாட்ச்ச பாக்குறப்போ மணி 5.30.

பக் பக்குன்னு அடிச்சுக்குது மனசு.

பைக் சாவி எடுத்துக்கிட்டு மறுபடி அந்த ஹோட்டல் இருக்கற எடத்துக்கு போனேன். அந்த ஹோட்டல் இருந்த எடத்துல ஒரு டீக்கடை இருந்துச்சு.

பத்திலாம் கொழுத்தி வெச்சு ஏதோ சாமி பாட்டெல்லாம் ஓடிட்டு இருந்துச்சு.

ஒரு டீ போடசொல்லி வாங்கிட்டு வந்து அந்த கடை பக்கத்துல இருக்கற ஒரு மெடிக்கல் ஷாப் வாசல்ல உக்காந்தேன்.

கனவுல வந்ததெல்லாம் மறுபடி மறுபடி என் மனசுக்குள்ளயே சுத்திட்டு இருந்துச்சு.

அந்த மெடிக்கல் ஷாப் வாசல்ல ஒரு தூண்ல ஒரு விளம்பரம் ஒட்டி இருந்துச்சு , ‘கெட்ட கனவுகளால அவதி படுறீங்களா? கவலைய விடுங்க’ன்னு.

‘அட போங்க டா’ன்னு சிரிச்சுக்கிட்டே டீ குடிச்சிட்டு வீட்டுக்கு வந்தேன்.

வந்ததும் ஒரு நெனப்பு மனசெல்லாம் ஓடிட்டே இருந்துச்சு.

‘கனவே ஆனாலும் குடி எத்தன பேர் வாழ்க்கைய கெடுக்குது, சின்ன பசங்க கையில கெடைக்கிற மாதிரி ஆசிட் கிடைக்குது, ஆர்வக் கோளாறுல பொண்ணுங்க பசங்களுக்கும் பசங்க பொண்ணுங்களுக்கும் ரொம்பவேதான் இடம் குடுத்துடுறாங்க, ரெண்டாயிரம் ரூபாயில இருந்து எல்லா மொபைல் போன்லயும் கேமரா இருக்கறதுனால இன்னைக்கு போட்டோ எடுத்து மிரட்டுறது ஒரு தொழிலா போச்சு, யார நம்புறது யார நம்பகூடாதுன்னே தெரியல, நல்லா ஆள் நடமாட்டம் இருக்க இடத்துலதான் பெரிய தப்பு எல்லாமே நடக்குது. இதுக்கெல்லாம் முடிவே இல்லையா’ ன்னு யோசிச்சிட்டிருந்தேன்.

தூக்கம் வந்துடுச்சு.

-மனோபாரதி

#Credit: https://www.facebook.com/ezhuthupizhai/photos/a.1387774244853803.1073741827.1380157772282117/1629094684055090/?type=3&theater

Comments

Popular posts from this blog

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், எனினும் தர்மமே வெல்லும்!!!

ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும் !

கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!